விளக்கு வசதி வேண்டும்

Update: 2023-04-05 12:03 GMT


மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம் பரசலூர் ஊராட்சியில் கல்யாணசுந்தரம் நகர் உள்ளது. இந்த பகுதியில் தெரு விளக்கு வசதி இல்லை. இதனால் இருள் சூழ்ந்து உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் நடந்து செல்ல பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் இந்த பகுதியில் அடிக்கடி வழிப்பறி சம்பவங்கள் நடைபெறுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து விளக்கு வசதி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், பரசலூர் 

மேலும் செய்திகள்