அந்தியூர் கீழ்வானி கிராமம் அருகே உள்ள சென்னிமலை கவுண்டன் புதூர் மேற்குத்தெருவில் சில ஆண்டுகளுக்கு முன்பு சாக்கடை கால்வாய் சேதமடைந்தது. மேலும் சாக்கடை கால்வாயோடு இணைந்துள்ள மின் கம்பத்தின் அடிப்பகுதியிலும் சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் மின்கம்பம் ஆபத்தான நிலையில் உள்ளது. அந்த வழியாக வாகனங்கள் செல்லவும் அச்சமாக உள்ளது. உடனே சேதமடைந்த சாக்கடை கால்வாயை சீரமைக்கவும், மின்கம்பத்தை மாற்றி அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுமா?