ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மீன்பிடி துறைமுக சாலையில் மின்விளக்கு வசதி இல்லை. இதனால் இந்த பகுதி இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. வழிப்பறி போன்ற சம்பவங்களும் நிகழ வாய்ப்பு உள்ளது. ,இரவு நேரங்களில் பாதை தெரியாமல் மீனவர்கள் அவதி அடைகின்றனர். எனவே இந்த பகுதியில் மின்விளக்கு அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?