மின்கம்பம் சீரமைக்கப்படுமா?

Update: 2023-03-26 11:03 GMT

திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் ஊராட்சி தெங்கால்காலனி சாலையோரத்தில் 5-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக மின்கம்பத்தில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் மின்கம்பங்கள் எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து விடக்கூடிய சூழல் நிலவுகிறது. இதன்காரணமாக அந்த வழியாக வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் மேற்கண்ட பகுதியில் உள்ள மின்கம்பங்களை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்