எரியாத மின்விளக்குகள்

Update: 2023-03-22 15:17 GMT

சேலம் மாவட்டம் ஓமலூர் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட பாகல்பட்டி ஊராட்சி ஓம்சக்தி நகரில் கடந்த 5, 6 தெருவிளக்குகள் எரியவில்லை. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் கூறியும், இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அந்த மின்விளக்குகள் எரியாததால் ஓம்சக்திநகர் பகுதி இருளில் மூழ்கி கிடக்கிறது. இரவு நேரங்களில் வழிப்பறி உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்கள் நடந்து விடுமோ என்ற அச்சத்தில் அந்த பகுதி மக்கள் உள்ளனர். எனவே திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் நடக்கும் முன் அந்த பகுதியில் மின்விளக்கு அமைத்து தர உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெயலிங்ககனி, ஓம்சக்திநகர், சேலம்.

மேலும் செய்திகள்