மின்விளக்குகள் பயன்பாட்டிற்கு வருமா?

Update: 2023-03-22 12:36 GMT
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதியில் தேசிய நெடுஞ்சாலை 4 வழி சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், மீன்சுருட்டி பகுதியில் இருந்து நெல்லித்தோப்பு கிராமம் வரை சாலையின் இருபுறங்களிலும் மின் விளக்குகள் அமைக்கப்பட்டு காட்சி பொருளாக உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதியில் இருட்டாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே காட்சி பொருளாக உள்ள மின்கம்பங்களை பயன்பாட்டிற்கு கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்