வீணாகும் மின்சாரம்

Update: 2023-03-19 17:12 GMT

நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுகா எஸ்.வாழவந்தியில் மின்விளக்குகளை இரண்டு பகுதிகளாக பிரித்து உள்ளனர். அதில் புதுரோடு பகுதிகளில் உள்ள சுமார் 30-க்கும் மேற்பட்ட மின்விளக்குகள் கடந்த ஒரு வாரமாக 24 மணி நேரமும் எரிந்து கொண்டே இருக்கிறது. இதனால் மின்சாரம் வீணாகிறது. எனவே மின்வாரிய துறையினர் இரவு நேரங்களில் மட்டும் மின்விளக்கு எரிய செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராமு, மோகனூர், நாமக்கல்.

மேலும் செய்திகள்