மின்ஒயர்கள் சீரமைக்கப்படுமா?

Update: 2023-03-15 17:30 GMT

நாமக்கல் மாவட்டம் மோகனூர் பஸ் நிலையத்தில் பேரூராட்சி கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு மின் இணைப்புகள் தனித்தனியாக உள்ளன. ஆனால் மோகனூர் போலீஸ் நிலையத்தின் பின்பகுதியில் எந்த ஒயர் எந்த கடைக்கு செல்கின்றது என தெரியாத அளவிற்கு தாறுமாறாக கிடக்கிறது. சில மின்ஒயர்கள் வாழைமரத்தின் மீது உரசியவாறு செல்கிறது. எனவே மின் விபத்துகள் ஏற்படும் முன் சம்பத்தப்பட்ட அதிகாரிகள் இந்த மின்ஒயர்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜபாண்டியன், மோகனூர், நாமக்கல்.

மேலும் செய்திகள்