கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரா் கோவில் தெருவில் உள்ள மின்கம்பம் பலத்த சேதமடைந்து இப்ப விழுமோ, எப்ப விழுமோ என்ற நிலையில் உள்ளது. மேலும் இதில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் மின்கம்பம் மிகவும் பலவீனம் அடைந்து காணப்படுகிறது. எனவே மின்விபத்து ஏற்படும் முன் மின்கம்பத்தை மாற்றி அமைக்க மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.