பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பாலையூர் சின்னாங்குட்டையில் உயர்மின் கோபுரம் ஒன்று உள்ளது. கடந்த 15 நாட்களாக இந்த உயர்மின் கோபுரத்தில் பல்புகள் எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பெண்கள், குழந்தைகள் இரவு நேரத்தில் அந்த வழியாக செல்ல முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.