உயர் கோபுர மின்விளக்கு வேண்டும்

Update: 2023-03-08 07:54 GMT

சேலம் மாவட்டம் ஓமலூரில் இருந்து தாரமங்கலம் செல்லும் வழியில் அம்மன் கோவில்பட்டி பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தமானது மூலக்கடை பஸ் நிறுத்தத்திற்கு அருகில் உள்ளது. அம்மன் கோவில்பட்டி பஸ் நிறுத்தத்தில் உயர் கோபர மின்விளக்கு இல்லை.இதனால் இரவு நேரத்தில் பஸ்சுக்காக காத்திருக்கும் பெண் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லை.
மேலும் அவ்வழியில் செல்லும் பஸ்கள் வெளிச்சம் இல்லாத காரணத்தால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் இருப்பது டிரைவருக்கு தெரிவதில்லை. இதனால் பஸ்கள் நிற்காமல் சென்றுவிடுகிறது.  எனவே பொதுமக்கள் நலன் கருதி அந்த பகுதியில் உயர் கோபுர மின் விளக்கு அமைத்து தர வேண்டும்.

மேலும் செய்திகள்