பழுதான மின்மோட்டார்

Update: 2023-03-05 16:29 GMT

நாமக்கல் மாவட்டம் பேட்டைப்பாளையம் ஊராட்சி கீழப்பேட்டைபாளையத்தில் பெண்கள் பொதுகழிப்பறை உள்ளது. இந்த கழிப்பறைக்கு ஆழ்துளை கிணற்றில் இருந்து மின்மோட்டார் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. தற்போது இந்த மின்மோட்டார் பழுதடைந்து உள்ளது. தண்ணீர் இல்லாததால் இந்த கழிப்பறை பயன் இல்லாமல் கிடக்கிறது. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பழுதடைந்த மின்மோட்டாரை விரைந்து சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ரிஷி, நாமக்கல்.

மேலும் செய்திகள்