பராமரிக்கப்படாத மின்விளக்கு

Update: 2023-03-05 16:20 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் பல ஆண்டுகளுக்கு முன்பு புதிய பஸ் நிலையம் செல்லும் சாலையில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. உரிய பராமரிப்பு இல்லாததால் தற்போது இந்த மின்விளக்கு பயன்படுத்தப்படாமல் ஆபத்தான முறையில் தொங்கி கொண்டுள்ளது. எனவே இந்த உயர் கோபுர மின்விளக்கை சீரமைத்து முறையாக பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

-மாறன், வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்