பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் மேற்கு ஒன்றியம், டி.களத்தூர் தேனூர் கிராமத்தில் ஏாளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அடிக்கடி பகல் நேரத்தில் மின் தடை ஏற்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இப்பகுதியில் உள்ள குரங்குகள் மின்சார ஒயர் மீது ஏறி செல்கின்றன. இதனால் தற்போது எதனால் மின்தடை ஏற்படுகிறது என்பது தெரியவில்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.