எரியாத மின் விளக்குகள்

Update: 2023-03-01 12:04 GMT

துறையூர்- பெரம்பலூர் சாலையில் லாடபுரம் பிரிவுச்சாலையில் நிழற்குடைகள் அருகருகே 5 சூரிய ஒளி மின்விளக்குகள் அமைக்கப்பட்டு நன்கு எரிந்தது. சாலை திறக்கப்பட்டு சில மாதங்களில் 5 மின் விளக்குகளும் பழுது ஏற்பட்டதால் அவற்றை கழட்டிவிட்டு மீண்டும் பொறுத்தவில்லை. இதனால் அங்கு இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் சட்ட விரோத செயல்களும், விபத்துகளும் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்