மின் நுகர்வோர்கள் அவதி

Update: 2023-02-26 11:45 GMT

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் மின்வாரிய அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு தினமும் காலை முதல் மின் கட்டணம் செலுத்துவது வழக்கம். ஆனால் சம்பவத்தன்று இவ்வலுவலகத்திற்கு பலர் மின் கட்டணம் செலுத்த சென்றபோது மின்சாரம் தடைபட்டுள்ளது. இப்போது மின் கட்டணம் கட்ட இயலாது என்று அலுவலர்கள் கூறியுள்ளனர். எனவே இனி வரும் காலங்களில் மின்சாரம் இல்லாத போதும் பேட்டரி மூலமாக யு.பி.எஸ். அமைத்து பொதுமக்களுக்கு தங்கு தடை இன்றி மின் கட்டணம் செலுத்தும் வசதியை ஏற்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்