மின்விளக்கு ஒளிருமா?

Update: 2023-02-22 13:56 GMT


நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் இடையாத்தங்குடி ஊராட்சி கிடாமங்கலத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது.இந்த மின்விளக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு மேலாக இயங்காமல் உள்ளது. இதனால் இந்த பகுதி இருள் சூழ்ந்து உள்ளது. இதன்காரணமாக பொதுமக்கள் இரவில் நடந்து செல்ல பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு உயர் கோபுர மின் விளக்கை ஒளிர வைக்க வேண்டும்.

பொதுமக்கள் திருமருகல்

மேலும் செய்திகள்