பொதுமக்கள் அச்சம்

Update: 2023-02-19 11:52 GMT

அரியலூர் மாவட்டம், கல்லங்குறிச்சி சாலையில் அமைந்துள்ளது இந்திராநகர். இப்பகுதியில் அதிகளவில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மின்வாரிய அலுவலகத்தில் மேற்கு புறத்தில் பொதுமக்கள் நடந்து செல்லும் பாதையில் பழமையான மின்கம்பம் ஒன்று சிதிலமடைந்து சாய்ந்த நிலையில் எப்போது வேண்டுமானாலும் காற்றில் கீழே விழும் அபாய நிலையில் உள்ளது. மேலும் இப்பகுதி வழியாக ராவுத்தன்பட்டி பகுதிக்கு பொதுமக்கள் அதிகளவில் சென்று வருகின்றனர். மேற்படி மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளதால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் நடந்து செல்வோர் மிகுந்த அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்