புகார்பெட்டி செய்தி எதிரொலி

Update: 2023-02-15 17:53 GMT
கடலூர் மஞ்சக்குப்பம் நேரு நகரில் உள்ள மின்கம்பத்தில் செடி, கொடிகள் படா்ந்து காணப்பட்டது. இதனால் மின்விபத்து ஏற்படும் அபாயம் உருவானது. இதுகுறித்த செய்தி படத்துடன் தினத்தந்தி புகார்பெட்டியில் வெளியானது. இதையடுத்து அதிகாரிகள் மின்கம்பத்தை சூழ்ந்திருந்த செடி-கொடிகளை அப்புறப்படுத்தி நடவடிக்கை எடுத்தனர். இதில் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் தினத்தந்திக்கு நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்