சிதிலமடைந்த மின்கம்பம்

Update: 2023-02-15 12:39 GMT
கரூர் மாவட்டம் நொய்யல்- வேலாயுதம்பாளையம் செல்லும் தார் சாலையில் நடையனூர் உள்ளது. இந்த பகுதியில் தார் சாலை ஓரத்தில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு மின் கம்பம் நடப்பட்டது. இந்த மின் கம்பத்தில் மின் கம்பிகள் பிணையப்பட்டு அந்த வழியாக 24 மணி நேரமும் மின்சாரம் செல்கிறது. இந்த மின்கம்பத்தில் இருந்து அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கும், கடைகளுக்கும் மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மின் கம்பம் நடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதன் காரணமாக மின்கம்பத்தில் உள்ள காங்கிரீட்டுகள் கீழே விழுந்து வருகிறது. இதனால் மின் கம்பத்தில் கம்பிகள் வெளியே தெரிகிறது. தார்சாலை ஓரத்தில் மின்கம்பம் இருப்பதால் திடீரென மின்கம்பம் முறிந்து தார்சாலையில் விழுந்தால் பெரும் விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்