சட்டவிரோத செயல்கள் நடக்க வாய்ப்பு

Update: 2023-02-15 11:51 GMT

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை பஸ் நிறுத்தத்தில் உயர் கோபுர மின்விளக்கு உள்ளது. இந்த விளக்கு மாலையில் எரியத் தொடங்கினால் மறுநாள் காலை வரை எரியும். இதனால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பயனடைந்து வந்தனர். கடந்த சில நாட்களாக இரவு 9 மணி அளவில் நின்று விடுகிறது. இதனால் அந்த பகுதி இரவு முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே திருட்டு, கொள்ளை போன்ற சம்பவங்கள் நிகழ்வதற்கு முன்பு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உயர் கோபுர மின் விளக்கை இரவு முழுவதும் எரிய செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்