பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், மருவத்தூர் கிராமத்தில் உள்ள ஒதியம் செல்லும் சாலையில் வயலுக்கு செல்லும் மின்பாதையில் அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றி சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. மேலும் மின்கம்பங்கள் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளன. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.