எலும்புக்கூடான மின்கம்பம்

Update: 2023-02-08 14:50 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பேரூராட்சி 3-வது வார்டு ஜெகினிக்கொல்லை கிராமத்தில் இருந்து மேல்பணம் கிராமத்திற்கு செல்லும் சாலையில் மிகவும் பழுதடைந்த நிலையில் மின்கம்பம் உள்ளது. இந்தப் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மின்கம்பம் பழுதடைந்து சிதிலமடைந்து எலும்புகூடு போல் உள்ளதால் மிகவும் அச்சத்துடன் மக்கள் இருக்கின்றனர். எனவே அசம்பாவிதம் ஏதும் நடைபெறும் முன்பு அந்த மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் அமைக்க அதிகாரிகள் முன்வரவேண்டும்.

-பிரபு, ஜெகினிக்கொல்லை, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்