ஆபத்தான மின்மாற்றி

Update: 2023-02-08 14:28 GMT
அரியலூர் தேரடி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு சீரான மின்சார வினியோகம் செய்யும் வகையில் இப்பகுதியில் மின் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின் மாற்றி அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது இந்த மின்மாற்றியை தாங்கி நிற்கும் மின் கம்பங்கள் சிதிலமடைந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் காணப்படுகிறது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின் போது இந்த மின் கம்பங்கள் உடைந்து விழுந்தால் மின்மாற்றி கீழே விழுந்து உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. மேலும் வீட்டு உபயோக மின்சாதன பொருட்களும் சேதம் அடைய வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்