பயன்படாத மின்விளக்கு

Update: 2023-02-05 17:38 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர்- திருப்பத்தூர் சாலையில் கால்நடை மருத்துவமனை எதிரில் உயர்கோபுர மின்விளக்கு உள்ளது. இந்த மின்விளக்கு அருகே செல்லும் மரக்கிளைகள் மறைத்து கொண்டு இருப்பதால் இரவு நேரங்களில் மின் விளக்கு வெளிச்சம் போதிய அளவு இல்லை. இதனால் மின்விளக்கு எரிந்தும் பயன் இல்லாமல் உள்ளது. அந்த வழியே செல்லும் பொதுமக்களும் அச்சப்படுகின்றனர். எனவே இந்த மரக்கிளைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சிவா, பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்