பயன்பாட்டிற்கு வராத மின் விளக்குள்

Update: 2023-02-05 11:37 GMT

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி பகுதியில் உள்ள நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையில், சாலையின் நடுவே மின் விளக்கு கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் தற்போது வரை பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதனால் இப்பகுதியில் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுவதினால் இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். இதில் பலர் காயம் அடைவதுடன், சிலர் உயிரிழந்தும் உள்ளனர். எனவே இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்