ஆபத்தான மின்கம்பம்

Update: 2023-01-29 16:18 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகில் தின்னகுட்லானஅள்ளி பகுதியில் சாலையோரம் மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. வேகமாக காற்று வீசினால் மின்கம்பம் கீழே சாய்ந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த பகுதியில் மக்கள் நடமாட அச்சப்படுகின்றனர். ஆபத்தான இந்த மின்கம்பத்தை சரிசெய்ய மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-வெங்கடாசலம், தின்னகுட்லானஅள்ளி, தர்மபுரி.

மேலும் செய்திகள்