மின்விளக்கு வேண்டும்

Update: 2023-01-25 17:44 GMT

சேலம் இரும்பாலை மோகன்நகரில் இருந்து சர்க்கார் கொல்லப்பட்டி செல்லும் சாலை உள்ளது. அந்த சாலை வழியாக இரவு நேரங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் கடும் அச்சத்துடன் செல்கின்றனர். அந்த சாலையில் மின் விளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனை பயன்படுத்தி மர்ம நபர்கள் அந்த வழியாக செல்பவர்களிடம் வழிப்பறியில் ஈடுபடுகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி அந்த சாலையில் மின்விளக்கு அமைக்க வேண்டும்.

- குருபாலன், இரும்பாலை.

மேலும் செய்திகள்