ஆபத்தான நிலையில் மரக்கிளைகள்

Update: 2023-01-22 15:06 GMT
பெங்களூரு நந்தினி லேஅவுட் பகுதியில் பி.எச்.ஈ.எல். பூங்கா உள்ளது. இந்த பகுதியில் உள்ள சாலையில் அடர்ந்து வளர்ந்து கிடந்த மரக்கிளைகளை மாநகராட்சி ஊழியர்கள் வெட்டி அகற்றினர். ஆனால் அவர்கள் சில கிளைகளை முறையாக வெட்டாமல் விட்டு சென்றுள்ளனர். தற்போது அந்த கிளைகள் முறிந்து விழுந்த நிலையில் உள்ளது. எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன்பு அந்த கிளையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்