எரியாத தெருவிளக்குகள்

Update: 2023-01-22 11:16 GMT

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம், வேப்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட புதுவேட்டகுடி ஊராட்சியில் ஆதிதிராவிடர்கள் வசிக்கும் பகுதியில் மக்கள் இரவு நேரத்தில் நடந்து செல்லும் வகையில் சாலை ஓரத்தில் தெரு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தெரு விளக்குகள் கடந்த சிலநாட்களாக இரவு நேரத்தில் எரிவது இல்லை. இதனால் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி இப்பகுதியில் திருட்டு சம்பவங்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்