அறுந்து தொங்கும் மின்வயர்களால் ஆபத்து

Update: 2023-01-18 15:06 GMT
பெங்களூரு பெல்லந்தூர் கரியம்மன அக்ரஹாரா பகுதியில் உள்ள வெளிவட்ட சாலையின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த பாலத்தின் அருகே மின்வயர்கள் அறுந்து தொங்குகின்றன. சாலையை கடக்க ஏராளமான பாதசாரிகள் அந்த பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். பாலத்தின் அருகே அறுந்து கிடக்கும் மின்வயர்களை பாதசாரிகள் மிதித்து விட்டால் அவர்கள் உயிர் போகும் அபாயம் கூட உள்ளது. உயிரிழப்பு ஏற்படும் முன்பு அறுந்து தொங்கும் மின்வயர்களை அகற்ற பெஸ்காம் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்