ஆபத்தான மின்கம்பம்

Update: 2023-01-11 17:11 GMT

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே பழைய பாளையம் ஏரி கிட்டத்தட்ட முழு கொள்ளளவை எட்டிய நிலையில் காணப்படுகிறது. இந்த நிலையில் அந்த ஏரியின் நடுவில் நீருக்குள் சாய்ந்த நிலையில் சில மின் கம்பங்கள் காணப்பட்டு வருகிறது. அந்த கம்பத்திலிருந்து மின்சாரம் செல்வதால் அப்பகுதி பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுகிறது. எனவே அங்குள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்கவோ அல்லது உயரப்படுத்த வேண்டும் என அப்பகுதியினர் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

-சேகரன், பழையபாளையம், நாமக்கல்.

மேலும் செய்திகள்