பெரம்பலூர்- எளம்பலூர் சாலை சேவா நகர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியின் அருகே சாலையின் நடுவே மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வழியாக இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையின் நடுவே மின்கம்பம் இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்த சாலையின் நடுவே உள்ள மின்கம்பத்தை அகற்றி சாலையோரம் நடவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.