ஆபத்தான மின்விளக்கு

Update: 2023-01-08 16:57 GMT

தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா சுண்டகாப்பட்டி முருகர் கோவில் அருகே உயர் கோபுர மின்விளக்கு சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும்படி தொங்கிய நிலையில் உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே விபத்து ஏதும் ஏற்படும் முன் சேதமடைந்த மின் விளக்கை சீரமைக்க வேண்டும்.

-ஆனந்தன், அரூர், தர்மபுரி.

மேலும் செய்திகள்