புகாருக்கு உடனடி தீர்வு

Update: 2023-01-08 10:37 GMT
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வாரச்சந்தையில் மூன்று சாலைகள் சந்திக்கும் இடத்தில் உயர்கோபுர மின்விளக்குகள் கடந்த சில மாதங்களாக எரியவில்லை என்று முத்து என்பவர் அனுப்பிய பதிவு தினத்தந்தி புகார் பெட்டியில் பிரசுரமானது. இதையடுத்து உயர்கோபுர மின்விளக்குகள் மீண்டும் ஒளிர்கின்றன. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த தினத்தந்திக்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்