மின்கம்பத்தால் விபத்து

Update: 2023-01-04 15:08 GMT

தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா மோப்பிரிப்பட்டி கிராமத்தில் ஜஸ்வர்யா கார்டன் தெருவின் நடுவே மின்கம்பம் உள்ளது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். அந்த மின்கம்பத்தை அகற்றி சாலை ஓரமாக அமைக்க வேண்டும். மேலும் இந்த பகுதியில் உள்ள சுமார் 32 மின் கம்பங்களுக்கு தெரு விளக்கு இல்லை. இதனால் அந்த பகுதி இருள் சூழந்து காணப்படுகிறது. இது பற்றி மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. பொதுமக்கள் நலன் கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-சசி காதர், செக்காம்பட்டி, தர்மபுரி.

மேலும் செய்திகள்