பகலில் ஒளிரும் மின்விளக்குகள்

Update: 2022-12-21 12:33 GMT
மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன்புள்ள உயர்கோபுர மின்விளக்குகள் தினமும் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரையிலும் தானாக எரிந்து அணையும் வகையில் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்த மின்விளக்குகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் பகலில் எரிந்து விட்டு மாலையில் அணைந்து விடுகிறது. இதனால் பகலில் தேவையின்றி ஒளிர்ந்து மின்விரயத்தை ஏற்படுத்தும் மின்விளக்குகள் இரவில் அணைந்து விடுவதால் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. எனவே மின்விளக்குகள் மீண்டும் இரவில் ஒளிரும் வகையில் மாற்றி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்