ஆபத்தான நிலையில் மின்மாற்றி

Update: 2022-12-14 12:04 GMT
கரூர் மாவட்டம், நொய்யல் அருகே நடையனூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு பின்புறம் ஒரு மின்மாற்றி அமைக்கப்பட்டு அதில் இருந்து அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் மின் மோட்டாருக்கு மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த மின்மாற்றி அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது மின்மாற்றியை தாங்கி நிற்கும் 2 மின்கம்பங்களும் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளன. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்மாற்றி கீழே விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்படுவதுடன், இப்பகுதியில் உள்ள மின்சாதன பொருட்களும் சேதம் அடையும் வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்