உயிர்பலி வாங்க காத்திருக்கும் மின்கம்பம்

Update: 2022-07-17 18:39 GMT

கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியம், நச்சலூரில் இருந்து நல்லூர் செல்லும் வழியில் ஓந்தாம்பட்டி தார்சாலை அருகே உள்ள ஒரு மின்கம்பம் சாய்ந்து கீழே விழும் நிலையில் உள்ளது. இந்த மின்கம்பத்தின் அடிப்பகுதியில் சிமெண்டு பூச்சுகள் பெயந்து கம்பிகள் வெளியே தெரிகின்றது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்