ஆபத்தான மின்மாற்றி

Update: 2022-12-04 14:16 GMT

பெரியநாயக்கன்பாளையம் ஈஸ்வரன் கோவில் அருகே உள்ள நெடுஞ்சாலையோரத்தில் பள்ளமான இடத்தில் மின்மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக சாலையின் மட்டத்துக்கு சமமாக மின்மாற்றியின் மேல் பகுதி காணப்படுகிறது. இதனால் திடீரென கட்டுப்பாட்டை இழக்கும் வாகனங்கள் சாலையோரம் பாய்ந்தால், மின்மாற்றியின் மேல் பகுதியில் மோதி மின் விபத்திலும் சிக்கும் அபாயம் நிலவுகிறது. இதனால் பெரும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. இதனால் அந்த ஆபத்தான மின்மாற்றியை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்