புகார் பெட்டி செய்தி எதிரொலி; புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டது

Update: 2022-11-30 13:12 GMT

கடையம் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து எலும்புக்கூடாக காட்சி அளிப்பதாக திருக்குமரன் என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் பிரசுரமானது. இதன் எதிரொலியாக அங்கு சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு, புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும் நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்