புகாருக்கு உடனடி தீர்வு

Update: 2022-11-30 13:00 GMT
தென்காசி மாவட்டம் கடையம் யூனியன் முதலியார்பட்டி பஞ்சாயத்து ரஹ்மத்நகர் சாலை வளைவில் உள்ள மின்கம்பங்களில் மின்விளக்குகள் கடந்த சில நாட்களாக எரியவில்லை என்று அம்ஜத் என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் பிரசுரமானது. இதையடுத்து அங்கு புதிய மின்விளக்குகள் பொருத்தப்பட்டு மீண்டும் இரவில் ஒளிர்கின்றன. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்