சேதமடைந்த மின் வயர்கள்

Update: 2022-11-23 14:39 GMT


தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றியம் தியாக சமுத்திரம் ஊராட்சி புள்ளபூதங்குடி ஆதிதிராவிடர் தெருவில் பல வருடங்களாக மின் வயர்கள் மாற்றாமல் சேதமடைந்த நிலையில் உள்ளது. மேலும் மின் கம்பங்களும் கான்கிரீட் பெயர்ந்து உள்ளது. இதனால் இந்த பகுதி பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். தற்போது மழை பெய்து வருவதால் மின் கசிவும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த மின் வயர்களை மாற்றி தர வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், பாபநாசம்

மேலும் செய்திகள்