சிதிலமடைந்த மின்கம்பம்

Update: 2022-11-23 11:55 GMT
கரூர் மாவட்டம், நடையனூரில் இருந்து பேச்சிப்பாறை செல்லும் சாலையில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு மின் கம்பம் நடப்பட்டு அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு மற்றும் மின்மோட்டோர்களுக்கும் மின் வினியோகம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மின் கம்பம் நடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதன் காரணமாக கம்பத்தில் உள்ள சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கீழே விழுந்து வருகின்றன. இதனால் மின்கம்பத்தில் கம்பிகள் மட்டுமே தெரிகிறது. இதனால் மின் கம்பம் முறிந்து கீழே விழும் நிலையில் உள்ளது. எனவே அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் முன்பு இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்