எரியாத மின்விளக்குகள்

Update: 2022-11-13 17:17 GMT

நாமக்கல் மாவட்டம் மோகனூருக்கும், கரூர் மாவட்டம் வாங்கலுக்கும் இடையே காவிரி ஆற்றில் உயர்மட்ட தரைவழி பாலம் உள்ளது. அதில் ஒரு பகுதியில் மின்விளக்கு அமைக்கப்பட்டு இருந்தது. இந்த விளக்கு வெளிச்சத்தில் இரவு, அதிகாலை நேரங்களில் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் நடை பயிற்சி மேற்கொண்டு வந்தனர். தற்போது 15-க்கும் மேற்பட்ட மின்விளக்குகள் பழுதாகி எரியாத நிலையில் உள்ளன. எனவே சம்மந்தப்பட்ட துறையினர் பழுதான மின் விளக்குகளை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

-நவலடி, மோகனூர், நாமக்கல்.

மேலும் செய்திகள்