கீழே விழும் நிலையில் உள்ள மின்கம்பம்

Update: 2022-11-13 13:01 GMT
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் இருந்து நொய்யல் செல்லும் தார் சாலையின் ஓரத்தில் புங்கோடை அருகே விவசாய நிலத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு இரும்பு மின் கம்பம் நடப்பட்டது. அந்த மின் கம்பத்தின் வழியாக 24 மணி நேரமும் மின்சாரம் செல்கிறது. இந்நிலையில் மின்கம்பம் நடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் வலுவிழந்து மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்