பழுதடைந்த தெருவிளக்குகள்

Update: 2022-11-09 15:49 GMT

நாமக்கல் மாவட்டம் சந்திரசேகரபுரம் கிராமத்திலிருந்து ராசிபுரம் செல்லும் வழியில் தட்டன் குட்டை கிராமத்திற்கும், வேப்பமர இடுகாட்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் சாலையோரத்தில் உள்ள தெரு விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது அந்த தெருவிளக்குகள் பல மாதங்களாக பழுதடைந்து உள்ளதால் இரவில் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு செல்கின்றனர். இந்த பகுதியின் சாலை ஓரத்தில் செல்லும் ஓடை தற்போது பெய்த கனமழை காரணமாக நிரம்பி உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்பு கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-நாச்சியார், ராசிபுரம், நாமக்கல்.

மேலும் செய்திகள்