ஆபத்தான மின்கம்பம்

Update: 2022-11-09 15:32 GMT

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு 10-வது வார்டு பள்ளிக்கூடத்தான் காலனியில் மின் கம்பம் உள்ளது. அந்த மின்கம்பம் சேதமடைந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து கம்பிகள் வெளியே தெரியும்படி மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. வேகமாக காற்று அடித்தால் கூட சாய்ந்து விழும் நிலையில் உள்ள மின்கம்பத்தை உடனடியாக அகற்றி புதிய மின்கம்பம் அமைக்க மின்சார வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குரு, பாலக்கோடு, தர்மபுரி.

மேலும் செய்திகள்