ஆபத்தான மின்கம்பம்

Update: 2022-11-06 16:00 GMT

தர்மபுரி மாவட்டம் ஏ.ஜெட்டிஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட எர்ரப்பட்டியில் இருந்து தேங்காமரத்துபட்டி கிராமத்திற்கு செல்லும் சாலையின் குறுக்கே மின் கம்பங்கள் உள்ளன. இதில் ஒரு மின் கம்பம் சாய்ந்து கீழே விழும் நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மின் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே மின்விபத்து ஏற்படுவதற்கு முன்பு சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை சீர் செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ரமேஷ், தர்மபுரி.

மேலும் செய்திகள்