மின்கம்பம் இருக்கு.. மின் விளக்கு எங்கே?

Update: 2022-11-02 20:03 GMT
கடலூர் மாநகராட்சி 7-வது வார்டு கம்பன் நகர் 2-வது குறுக்குத் தெருவில் மின்கம்பம் இருந்தும் மின்விளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை உள்ளது. மேலும் இருளை பயன்படுத்தி வழிப்பறி, திருட்டு போன்ற குற்றச்சம்பவங்கள் நடைபெறும் அபாயம் உள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர். இதை தவிர்க்க மின்சாரத்துறை அதிகாாிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்